புலம்பல்கள் - PULAMBALGAL

Sunday, February 5, 2012

முன் ஜென்மம்...

ஒரு சில மாதங்களுக்கு முன்னாடி வரைக்கும் இந்த முன் ஜென்மம் பின் ஜென்மம் பத்தி எல்லாம் கவலையே பட்டதில்ல.. அப்புறம் இப்ப மட்டும் ஏன்னு கேட்டா..........

ஒரு நாள் எப்பவும் போல புலம்பிகிட்டு இருக்கும் போது நம்ப நண்பர் ஒருத்தர் பெரிய தத்துவ மேதை ரேஞ்சுக்கு "இத படி.. வாழ்க்கையில நிறைய விஷயங்கள் புரியும்"-னு சொல்லிட்டு Many Lives Many Masters by Dr Brian Wiess ஒரு புத்தகத்தை குடுத்தாரு.. Dr Brian Wiess அமெரிக்காவுல மியாமி ஆஸ்பத்திரில மனோ தத்துவ நிபுணரா இருக்கறாரு.. அதுவும் ஒரு இயக்குனரா இருக்காரு.. ஏற்கனவே எனக்கும் டாக்டருங்களுக்கும் ஆகாது.. இதெல்லாம் படிக்கனுமான்னும் யோசிச்சேன்.. விதி யார விட்டுது... வெட்டியா இருக்கறதுக்கு ஒரு இருநூறு பக்கம் தான படிச்சு தான் பாப்போமேன்னு.. ஆரம்பிச்சா மனுஷன் கிலிய கெளப்பிட்டாரு..

அவர் கிட்ட கேதரின்-னு ஒரு பொண்ணு மன அழுத்தம், தண்ணீர பாத்தா பயம், குடிக்க கூட பயம்னு வந்தாங்களாம். இவரும் அந்த பொண்ணுக்கு சின்ன வயசுல எதாவது பிரச்சனை இருந்திருக்கும் அதனால தான் இதெல்லாம்னு எல்லாருக்கும் பாக்கற வைத்தியத்த பாத்திருக்காரு. ஆனா பொண்ணு குணமடஞ்சா மாதிரி தெரியல.. சரி ஹிப்னடிசத்துல எதாவது கண்டு பிடிக்க முடியுமான்னு பாத்திருக்காரு.. சின்ன வயசுல பொண்ணு கொஞ்சம் கஷ்ட பட்டிருக்கு.. சரி அது தான்னு தலைவரும் சரியாய் போயிடும்னு சொல்லி இருக்காரு.. ஆனா ஒரு முன்னேற்றமும் இல்ல..

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு, அந்த பொண்ணு ஹ்ய்ப்னடிக் டிரான்ஸ்-ல (hypnoic trance ) இருக்கும் போது, முடியலம்மா என்னால முடியல, அவ்வ்வ்வ், இதுக்கு மேல தாங்காது.. நீயே இந்த பிரச்சனை எப்போ-ல இருந்து இருக்குன்னு சொல்லிடுன்னு சரண்டர் ஆயிட்டாரு.. அந்த பொண்ணு நான் இப்போ பெரிய அங்கி போட்டிருக்கேன், எல்லாரும் கழுத மேல போறாங்கன்னு பழைய எகிப்து நாட்ட விவரிச்சி சொல்லி இருக்கா.. தலைவர் அரண்டு மெரண்டு போய் என்னம்மா சொல்ற-னு முழிசிருக்காரு... அப்புறம் தான் அண்ணாத்தைக்கு தெரிஞ்சிருக்கு இது முன் ஜென்மம்னு.. அப்புறம் ஆர்வ கோளாறுல அந்த பொண்ண பல ஜென்மத்த பத்தி கேட்டு தெரிஞ்சிக்கிறாரு.. அந்த பொண்ணு கிட்ட தட்ட 87 ஜென்மம் எடுத்திருக்காம். [அடேங்கப்பா.. நமக்கெல்லாம் மோட்சம்னு ஒன்னு கெடைக்கவே கெடைக்காது போலிருக்கே.. அவ்வ்வ்வ்]

அதுல ஹைலைட்டே தலைவர் அந்த பொண்ணு கிட்ட இறந்தப்புறம் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிகிறது தான்.. ஒரு ஒரு ஜென்மம் முடிவிலும் ஆன்மா ஒரு அமைதியான நிலைய அடைஞ்சு மிக வெளிச்சமான ஒரு இடத்த நோக்கி போகுது.. சில சமயங்கள்ல மத்த ஆன்மாக்கள் வழி காட்டுதாம்.. அந்த வழி காட்டி ஆன்மாக்கள் தான் மாஸ்டர்ஸ்-ஆம். அந்த ஆன்மாக்கள் நெறைய புண்ணியம் செஞ்சிருக்கும் போல.. ஒவ்வொரு ஆன்மாவும் ஜென்மம் எடுக்கறதே எதாவது நன்மை செஞ்சு இல்ல கெட்டதை விட்டு மேன்மை அடயறதுக்கே.. அப்படி இந்த ஜென்மத்து வேலைய ஒழுங்க செய்யலைன்ன அடுத்த ஜென்மத்துல இந்த வேலையும் சேத்து செய்ய வேண்டியிருக்கும்.. அதனால எல்லாரும் இந்த ஜென்மத்துல என்ன செய்யணுமோ அத ஒழுங்கா செஞ்சிடுங்கன்னு சொல்றாங்க.. அந்த மாதிரி எல்லா வேலையும் செஞ்சிட்டா நம்ம கூட மாஸ்டர் ஆன்மா ஆயிடலாம்.. [விளங்கினா போலத்தான்]

ஆனா, ஒரு மேட்டர் மட்டும் இடிச்சுது.. இந்தம்மா ஹ்ய்ப்னடிக் டிரான்ஸ்-ல இருக்கும் போது ஒரு சில மாஸ்டர் ஆன்மாக்கள் வந்து அவங்க மூலமா பேசுது.. இது எப்படின்னே புரியல.. டிரான்ஸ்-ல இருக்கும் போது அவங்க உள் மனசுல என்ன இருக்கோ அத தான் சொல்ல முடியும்.. ஆனா இங்க என்னடான்னா ஒரு மீடியம் ரேஞ்சுக்கு யார் யாரோ வந்து அவங்க அவங்க விஷயத்த சொல்லிட்டு போறாங்க..

இப்படி எதையாவது சொல்லி இப்போலாம் நான் எதுக்கு பொறந்தேன்னு கேள்வி கேட்டுக்கிட்டு முடிய பிச்சிக்கறதே வேலைய போச்சு.. படு பாவிங்க மனுஷன நிம்மதியாவே இருக்க விட மாட்டாங்க போலிருக்கு.. எனக்கென்னவோ முன் ஜென்மம் எதிலேயும் நல்லவனா இருந்திருக்க வாய்ப்பே இல்லன்னு தோணுது இருந்திருந்தா இந்நேரம் இப்படியா புலம்பிகிட்டு இருக்க போறேன்..

நீங்களும் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கனும்னா இந்த புத்தகத்தை வாங்கி படிங்க.. :D

Labels: ,

posted by ACE !! at 9:02 PM 4 comments

Tuesday, March 16, 2010

அவசரமாய் ஒரு புலம்பல்

புலம்பி நிறைய நாள் ஆச்சு. புலம்பரதுக்கா விஷயம் இல்ல. சமீபத்துல திருவாரூர் கிட்ட ஒரு இடத்துக்கு அப்பா அம்மாவோட போயிட்டு புதுவைக்கு திரும்பி வந்துகிட்டு இருந்தேன். மதியம் 12.30 மணி, சரியான வெயில், காலைல 5 மணிக்கு கிளம்பினது. பசி வேற வயித்த கிள்ளுது. அந்த நேரம் பாத்து தவளகுப்பம் (பாண்டி கடலூர் நடுவுல ஒரு ஊர) கிட்ட ஒருத்தன் எதிர்க்க கார்-ல இருந்து காக்கா வலிப்பு வந்த மாதிரி கைய ஆட்டிக்கிட்டே இருந்தான். இவன் எதுக்குடா என்ன திட்டரான்னு, நானும் அவன திட்டிகிட்டே(மனசுல தான்) வேகமா வந்துட்டேன். ஒரு 4 கிமி வந்து பாத்தா பெரிய ட்ராபிக் ஜாம். ஒரு சின்ன பாலதுலையோ அதுக்கு பக்கத்துலையோ லாரி ஒன்னு பிரேக் டவுன். திரும்பி வரவும் முடியல. அட நல்லவனே இதுக்கு தான் கைய ஆட்டினியாடா, நல்ல இருடான்னு சபிச்சிட்டு சந்து பொந்தெல்லாம் போய் ஒரு வழியா அந்த பாலத்து கிட்ட போயாச்சு. கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா.. சரி வேணாம் விடுங்க...கரைக்டா தமிழ் படத்துல க்ளைமாக்ஸ்-ல வர போலிஸ் மாதிரியே நிஜ போலிசும் சரியான நேரத்துல வந்து, மெயின் ரோடு-அ கிளியர் பண்றன்னு எங்க சைடு-ல இருக்க வண்டியெல்லாம் நிறுத்திட்டாங்க. வாழ்க உங்க கடமை உணர்ச்சி. நல்ல இருங்கடா நல்ல இருங்க. ஒரு 5 நிமிஷம் லேட்டா வர கூடாது. நமக்கு தான் இந்த மாதிரி எல்லாம் நடக்குது. ஒரு 10 நிமிஷத்துக்கும் குறைவான தூரத்த 2 மணி நேரத்துல கவர் பண்ணோம்.

எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க மக்கா, இந்த போலிஸ் காரங்க கிட்டலாம் "தொலை தொடர்பு சாதனம்" எதுவுமே கிடையாதா? ஒரு போன் அடிச்சி முந்தின போலிஸ் ஸ்டேஷன்-ல சொல்லி, எல்லாரையும் வேற வழியா திருப்பி விட எத்தனை நேரம் ஆகும்? இத்தனைக்கும் அந்த தவளகுப்பம் போலிஸ் ஸ்டேஷன்-ல சொல்லி எல்லாரையும் திருப்பி விட்டுருந்தா கூட வேற வழியா 1 மணி நேரத்துல வந்திருக்கலாம். அத்தன வண்டியையும் 2 மணி நேரம் நிக்க வச்சு என்ன சாதிச்சாங்களோ.. இல்ல நான் தான் ரொம்ப எதிர்பாக்கிறேனோ?

Labels:

posted by ACE !! at 7:35 PM 11 comments

Tuesday, April 21, 2009

எடுத்ததில் பிடித்தது

புலிய பாத்து பூனை சூடு போட்டுகிட்ட மாதிரி நானும் இந்த PIT மக்களை பாத்து பொட்டியும் கையுமா அலைஞ்சு எடுத்ததுல ஒன்னு ரெண்டு தேறுச்சு... அதுல ஒரு சில இங்க



Labels:

posted by ACE !! at 9:46 PM 9 comments

Sunday, June 8, 2008

நிலமை கவலைக்கிடம்!!

இந்த படத்துல இருக்கிற மீனும் நானும் ஏறக்குறைய ஒன்னு தான் :( என் நிலவரமும் இப்போ கலவரமாத்தான் இருக்கு. எப்பவுமே கழுத்து மேல கத்தி வச்ச மாதிரி இருக்கு.
இந்தியா வந்து ஜாலியா இருக்கலாம்னு நினைச்சா, அந்த நினைப்புல மண் அள்ளி போட்டுட்டு, ஆபிஸ்ல ஆணி பிடுங்க சொல்லி தலையிலயே ஆணி அடிக்கறாங்க.. நிஜமாவே பிடுங்க தெரியலன்னாலும் கேக்க மாட்றானுங்க.. என்னவோ நான் தெரிஞ்சிகிட்டே பிடுங்க மாட்டேன்னு சொல்ற மாதிரி நினைச்சுகிட்டு கழுத்தறுக்கறாங்க.. சரி பிடுங்கற மாதிரி நடிக்கலாம்னாலும், விடாம கண்டு பிடிச்சுடறானுங்க... என்னத்த தான் பண்றதோ.. என்ன கொடுமை சார் இது :(

Labels: ,

posted by ACE !! at 6:28 PM 14 comments

Tuesday, October 16, 2007

தடங்கலுக்கு வருந்துகிறோம்...

கொடுமை கொடுமைன்னு இந்தியாவுக்கு வந்தா, இங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம். நம்ம நேரம் இப்படி தான் இருக்கு. வந்து 3 மாசத்துக்கு மேல ஆச்சே.. சரி ஒரு பதிவை போட்டு, அட்டெண்டன்ஸ் போடுவோம்னு பாத்தா, யு.எஸ்-ல இருந்து கிளம்பினதுல இருந்தே பிரச்சினை தான்.

L.A-ல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கவுண்டர கண்டுபிடிக்கறதே பெரிய பாடா போச்சு.. சென்னை ஏர்போர்டே தேவலாம். பஸ்ல போ, இந்த பில்டிங் போ, அங்க போ, லிப்ட்ல போ, லெப்ட்ல போன்னு ஒரு வழியா கண்டு பிடிச்சு எல்லா ஃபார்மாலிட்டீஸையும் முடிச்சேன்.

கரெக்டா விமானத்துல ஏறப்போகும் போது, உங்க கைப்பெட்டி பெருசா இருக்கு, எங்க கிட்ட குடுங்க, சிங்கப்பூர் வந்து வாங்கிக்குங்கன்னு கேட்ல ஒரு ஃபிகர் சொல்லுச்சேன்னு நம்பி பொட்டிய குடுத்தேன். சிங்கப்பூர் வந்தா பொட்டிய காணோம்.. அங்க இருந்த அக்கா கிட்ட கேட்டா, பொட்டியா என்ன பொட்டின்னு கலாய்க்குது. டேய், அண்ணன் யாரு தெரியும் இல்லன்னு சவுண்ட் விட்டப்புறம் பொட்டிய செக் இன் பண்ணிட்டோம்னு அசால்டா சொல்றாங்க. அடப்பாவிகளான்னு திட்டிகிட்டே வெளியே போய் (பாஸ்போர்ட்லாம் சரண்டர் செஞ்சப்புறம்) பொட்டிய பாத்தா உள்ள இருந்த கேமராவையும், கேம்கார்டரையும் காணோம்.

கேமரா வாங்கி 10 நாள் கூட ஆகல, நம்ம CVR கிட்ட ஆலோசனையெல்லாம் கேட்டு வாங்கினேன். அவர் சொல்லிகுடுத்த பாடத்தை எல்லாம் டெஸ்ட் பண்ணி கொடுமைபடுத்தலாம்னு வாங்கின கேமராவை சுட்டுட்டானுங்க.. படுபாவி பசங்க :( (இந்த கொடுமைய தடுக்க CVR செஞ்ச சதியான்னு தெரியல) இதுல கேமரா போனதைவிட, அதுல எடுத்த வீடியோ / படம் எல்லாம் போச்சு.. சோகத்தை வார்த்தையில வடிக்க முடியல.. கேமரா தொலைஞ்சதுக்கு துக்கம் கொண்டாடறதுலயே 1 மாசம் போயிடுச்சு.

சரி இதுக்கு மேலையும் காலம் கடத்தாம நம்ம கணிணி பொட்டிய ரெடி பண்ணி, நம்ம இணையுலக சகாக்களை எல்லாம் சந்திப்போம்னு, ரிட்சி தெருவுக்கு போய் மதர் போர்ட், ப்ராஸசர், RAM, எல்லாம் வாங்கிட்டு வந்து ஒரு வழியா கணிணியை ரெடி பண்றதுக்கே 1 மாசம் ஆயிடுச்சு. இது பத்தாதுன்னு இணைய இணைப்பு குடுங்கடான்னா, இதோ வரேன், அதோ வரேன்னு, 10 நாள் ஏர்டெல்ல இழுத்தடிச்சுட்டானுங்க.. ஏர்டெல் சர்வீஸ் வாங்கறதுக்குள்ள தொண்டை தண்ணி வத்தி போச்சு.. 6 தடவை போன் பண்ணப்புறம் தான் கனெக்ஷன் குடுத்தாங்க.

அப்பாடா, எல்லாம் செட் ஆயிடுச்சு, இந்த வாரம் பதிவ போட்டுடுவோம்னு நெனைச்சேன், நெனைச்சது தான் தாமதம், எவன் கண்ணு பட்டுதோ தெரியல, கணிணில USB ஸ்லாட் எதுவும் வேலை செய்யல, என் கிட்ட இருக்கற மவுஸ், கீபோர்ட் ரெண்டுமே USB-ல தான் இணைக்கனும். இது என்னடா மதுரைக்கு வந்த சோதனைனு நானும் எனக்கு தெரிஞ்ச வித்தையெல்லாம் காட்டியும் என் கணிணி அசரலை..

நானும் மனம் தளராத விக்கிரமாதித்தனா, கடன் வாங்கியாவது ஒரு பதிவை போடனும்னு, ஒரு ஃபிரண்ட் கிட்டேயிருந்து PS2 கீபோர்ட், மவுஸ் எல்லாம் வாங்கிட்டு வந்தேன். நேரம் நல்லா இல்லைனா, ஒட்டகத்துல மேல உக்காந்தாலும் நாய் கடிக்கும்னு சும்மாவா சொன்னாங்க. சிரைக்க போனவன் பொட்டிய மறந்த மாதிரி, கீபோர்ட் வாங்க போன நான் பை எதுவும் எடுத்துக்காம போயிட்டேன். மொபெட்ல வரும் போது, ஒரு பள்ளத்துல இறங்கி ஏறினப்போ சைட் பொட்டியில இருந்த கீபோர்ட் கீழே விழுந்துடுச்சு. எவனாவது அது மேல வண்டிய ஏத்திட போறானுங்கன்னு அவசர அவசரமா ஓடி ஏற்கனவே அடிபட்ட கால்ல இன்னும் நல்லா அடிபட, கீபோர்ட மட்டும் எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

இனிமே சந்தோஷமா பதிவ போட்டு டார்ச்சர் பண்ண்லாம்னு பாத்தா, கீபோர்ட்ல இருந்து ஸ்பேஸ் பாரும், Atl கீயையும் காணோம். :(.. கீழே விழுந்த வேகத்துல எங்கேயோ கழண்டு விழுந்துடுச்சு.. :(

அட போங்கப்பா, ஒரே ஒரு பதிவை போடறதுக்கு இத்தனை தடங்கலா?? என்ன கொடுமை சார் இது.. :(

Labels: ,

posted by ACE !! at 4:55 PM 34 comments

Friday, June 8, 2007

விடை கொடு யு.எஸ் நாடே!!!

இந்த காலம் தான் எத்தனை வேகமா ஓடுது.. இப்போ தான் வீட்ல சொல்லிட்டு ஃபிளைட் ஏறின மாதிரி இருக்கு.. ஆனா இரண்டரை ஆண்டுகள் ஓடினதே தெரியல..

இந்த இரண்டரை வருஷத்துல தான் எத்தனை அனுபவங்கள். நினைச்சு பாத்தா நல்லது, கெட்டது, சண்டைகள், சோகங்கள், சந்தோஷங்கள்னு ஒரு பெரிய அருவியே மனசுல கொட்டுது.

என்னடா, ஒரே ஓவர் பீலிங்க்ஸா இருக்கேன்னு பாக்கறீங்களா?? வேற ஒன்னும் இல்ல, தாயகம் திரும்ப முடிவெடுத்திருக்கேன்.. புது ஆணி, பழைய ஆணின்னு, ஒரே ஆணிக்குவியலுக்கு நடுவுல நெஞ்ச நிமிர்த்தி இத்தனை நாள் தாக்கு பிடிச்சாச்சு.. இதுக்கு மேலேயும், இங்கிருந்தா நம்ம தலைலயே ஆணி அடிச்சிடுவாங்க, அதனால பொட்டிய கட்டலாம்னு முடிவு செஞ்சாச்சு..

ஆகையினால் இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால், டல்லாஸ் நகரை விட்டு , எத்தனை ஆணிகள் கொடுத்தாலும் சளைக்காம பிடுங்கற, ஒரு மாவீரன்.. அஞ்சா நெஞ்சன்.. (ஹி ஹி.. நான் தானுங்கோ.. ) கூடிய விரைவில் பிரிய போகிறான்.. (ம.சா : இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. ).

இனி யு.எஸ்-ல மழை குறையலாம். யு.எஸ்-ல மழை குறைஞ்சு தண்ணி பஞ்சம் வந்தா சொல்லுங்க.. திரும்பி வந்து மழை பொழிய வச்சிடலாம் :D

இனி சென்னை / புதுவையில் மாதம் மும்மாரி பெய்யும்.. எல்லோரும் குடை / மழைகோட் மறக்காம எடுத்துட்டு போங்க

(நல்லவங்க இருந்தா மழை பெய்யுமாமில்ல :D :D ).

சரி சரி, இத்தோட நிறுத்திடறேன்.. மொக்கைய சொன்னேன்.. ப்ளாக நிறுத்திடுவேன்னு சந்தோஷபடாதீங்க.. அவ்வளவு லேசுல உங்கள விடறதா இல்ல...

இப்போ கிளம்பறேன்.. நெக்ஸ்ட் மீட் பண்றேன்.. வர்ட்டா!!!

BGM:

விடை கொடு யு.எஸ் நாடே!!
வெயில் வருத்தும் டல்லாஸ் நகரே!!
பரிட்டோ கடையே
வெண்டிஸ் பர்கரே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா !!!!!!

Labels: ,

posted by ACE !! at 7:19 AM 41 comments

Tuesday, May 22, 2007

சில்லறைகள்..

ரொம்ப நாளா போஸ்டே போடல, என்ன போடறதுன்னும் தெரியல.. எதாவது தேறுதான்னு வலைமேஞ்சிட்டு இருந்தா, நம்ம G3 சில்லறை வாங்கினத பத்தி கோப்ஸ் சொன்னது ஞாபகம் வந்துது.. சில்லறை வாங்கியத கூட போஸ்டரது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே, நமக்கும் நிறையா அனுபவம் இருக்கேன்னு யோசிச்சேன்.. அப்போ தான் ஒருத்தர் ஹெல்மெட்ட பத்தி எழுதியிருந்தாங்க.. அதனால நானும், நான் வாங்கிய சில்லறைகள பத்தி ஒரு மொக்கய போட்டுடலாம்னு செயற்குழு பொதுகுழு எல்லாம் கூட்டி முடிவெடுத்தேன்.. :D

சில்லறை 1:


11ம் வகுப்புல படிக்கும் போது, ஒரு நண்பன் அவங்க அப்பாவோட TVS 50 எடுத்துட்டு வந்திருந்தான்.. ஆர்வகோளாறுல அத நான் ஓட்டரேன்னு வாங்கி ஓட்டினேன். நான் வண்டி ஓட்டரத பத்தி குடுத்த பில்ட்-அப்ப நம்பி கொடுத்திட்டான்.. நம்ம வண்டி ஓட்டுறதே பைனரி ஸ்டைல்ல தான்.. 0, இல்லேனா 50.. நடுவுல 10,20,30 லாம் பழக்கமே இல்ல.. புதுவை ஈஸ்வரன் கோவில் தெரு??ல எதுத்தா போல வந்த காருக்கு வழி விடறேன்னு கட் அடிச்சு கவுந்து விழுந்தோம்.. கால் கை எல்லாம் சிராய்ச்சிட்டு ரத்தக்களரி ஆயிடுச்சு.. நல்ல அடி.. நடக்கவே முடியல... வண்டிக்கு வேற சம டேமேஜ்...

இதெல்லாம் அரசியல்ல சகஜம்டானு எத்தனை சொல்லியும், எனக்கு வண்டி ஓட்ட தெரியலன்னு அந்த பையன் அதுக்கப்புறம் வண்டி கொடுக்கவே மாட்டேன்னு சொல்லிட்டான்.. லூஸு பய.. ..ஒழுங்கா ஓட்ட விட்டுருந்தா இன்னேரம் ஒரு பைக் ரேஸ் வீரனா, அஜித் மாதிரி வர வேண்டிய ஆளு :D:D .. சரி, சரி விடுங்க.. பழைய கதைய பேசி என்ன ஆகப்போகுது..

சில்லறை 2:

இது ரொம்ப சுவாரசியமா இருக்காது.. டைடல் பார்குல இருந்து வந்து மத்திய கைலாஷ்ல சிக்னல் விழறதுக்கு முன்னடி ரைட் அடிக்கனும்னு வேகமா திரும்ப முயற்சி பண்ணேன்.. அவ்வளவு தான் தெரியும்.. ஒரு போலீஸ்கார மாமா பக்கத்துல நின்னு எதோ சொல்லிகிட்டு இருக்கார்.. என்ன நடந்ததுன்னே தெரியல.. கை மணிக்கட்டுல சம் அடி.. இங்கேயும் ரத்தக்களறி ஆயிடுச்சு.. அந்த நல்ல போலிஸ் மாமா, என்னப்பா அடி பட்டுச்சா?? ஆஸ்பத்திரிக்கு போகலாமான்னு ஆட்டோலாம் பிடிச்சிட்டார்.. நம்ம என்னிக்கு வலிச்சுதுன்னு சொல்லியிருக்கோம்.. அதனால, அடி படாத மாதிரியே ஆக்ட் வுட்டுட்டு சிரிச்சிகிட்டே வந்துட்டேன்..

சில்லறை 3:




ஒரு செப்டம்பர் மாத பின்மாலை பொழுது. லேசா மழை பெஞ்சிட்டு இருந்துது.. இந்த மாதிரி ஒரு ரம்மியமான் நேரத்துல, என்னோட வாகனத்துல மெய் மறந்து வந்துட்டு இருந்தேன்.. மழைனால ட்ராஃபிக் வேற கம்மியா தான் இருந்துது.. அந்த சில்லுனு மழைல நனைஞ்சிட்டு வர சுகம் இருக்கே....

சரி விஷயத்துக்கு வருவோம்... இப்படியா பட்ட நேரத்துல, எனக்கு முன்னடி ஒரு பிட்சா ஹ்ட் டெலிவரி ஆள், ஸ்கூட்டர்ல பறந்துட்டு இருந்தான்... (அவங்க ஸ்பீட்லாம் அடிச்சுக்கவே முடியாது.. அதுவும் ஸ்கூட்டர்ல..).. திடீர்னு பாத்தா நெஜமாலுமே பறந்துட்டு இருந்தான்.. என்னனு பாத்தா தலைவரு ரோட்டுக்கு நடுவுல மீடியனுக்காக போட்டிருந்த கல்லு மேலே ஏறி வந்த் வேகத்துல அப்படியே பறந்தார்... என்ன ஒரு கண்கொள்ளா காட்சின்னு நான் அத பாத்துட்டு ரோட்டுல சிந்தி இருந்த ஆயில பாக்கல.. எந்த வீணா போன வெண்ணையோட வண்டில இருந்து வழிஞ்சிருக்கு.. அதுல வண்டியோட முன் சக்கரம் ஏறி அங்கேயே சுத்துது.. :((( அப்புறம் என்ன, அந்த பிட்ஸா காரனுக்கு போட்டியா நானும் பறந்தேன்.. ஒரே வித்தியாசம்.. அவன் ஸ்கூட்டரோட பறந்தான்.. நான் பைக்க விட்டுட்டு பறந்தேன்.. பறந்து தரையில நெஞ்சு பட லேண்ட் ஆனேன்... ஆனாலும் மீசைல மண்ணு ஒட்டல.. சிங்கம்லே ACE :D

விழுந்த வலி ஒரு பக்கம்னா, ஒரு வெண்ணை கூட உதவிக்கு வரல.. நானே கஷ்ட பட்டு எழுந்து, என் வண்டிய தள்ளிட்டு ரோட்டோரம் வந்தா.. ரெண்டு பேர் அட்வைஸ்.. " பாத்து ஓட்டனும்.. கண்ணு மண்ணு தெரியாம ஓட்டினா இப்படி தான்"னு. அன்னிக்கு வலினால ஒன்னும் செய்ய முடியல.. இல்லேன்னா..

சில்லறை 4:

சென்னையில மீடியன் இல்லாத தெருக்கள்ல எழுத படாத சட்டம், எதிர் பக்கம் ஆள் இல்லைனா ராங் சைட்ல எத்தனை வேகமா வேணா வரலாம்.. அதே போல் ரெண்டு பேர் எதிர்க்க எதிர்க்க வந்தா, who blinks first மாதிரி, யார் முதல்ல நகரராங்கன்னு கடைசி நொடி வரைக்கும் போட்டி இருக்கும்.. கடைசில, ரெண்டு பேருமே அவங்கவங்க லெஃப்ட் சைட் கட் அடிச்சு போவாங்க.. இதுல கொஞ்சம் டைமிங் மிஸ் ஆச்சுனா அம்பேல் தான்..

கோடம்பாக்கம் பாலத்துல, இப்படி ஒரு முறை நான் கரைக்டா போயிட்டிருந்தேன்.. கொஞ்ச தூரத்துல, ஒருத்தன் ராங் சைட்ல வந்துட்டு இருந்தான்.. ரெண்டு பேரும் வேகமா தான் வந்தோம்.. அவன் டபுள்ஸ் வேற வந்துட்டு இருந்தான்.. கடைசி நொடி வரைக்கும் யாரும் வழி விடல.. கிட்ட வந்து நான் கரைக்டா கட் அடிச்சேன்.. அந்த dog கட் அடிக்காம நேரே வந்துட்டான்... வண்டி லைட்டா உரசுச்சு.. நான் மீண்டும் ஆஞ்சநேயரா, இந்த முறை பைக்கோட பறந்தேன்.. பாலம் இறக்கத்துல விழுந்ததுல, பைக்கோட ரெண்டு மூணு முறை உருண்டு, தலை ஒரு ரெண்டு தடவயாவது தரைல வேகமா தட்டுச்சு... நல்ல வேளை ஹெல்மெட் போட்டிருந்ததால தப்பிச்சேன்.. (யாருப்பா நாங்க மாட்டிக்கிட்டோம்னு சொல்றது.... )

அதோட, இந்த சேஷ்டைலாம் நிறுத்திகிட்டேன்.. அடுத்தவன் திறமைய நம்பி போனா இப்படி தான், அதனால் என் திறமைய மட்டும் நம்பி பைக் ஓட்டனும்னு முடிவு கட்டியாச்சு...

--------------------------------------------------------

பைக்ல அவ்ளோ தான்.. இன்னும் ரெண்டு சில்லறை கார்ல வாரினேன்.. அது இன்னொரு நாளைக்கு... சரி சரி.. மொக்கை ஸ்டாப் பண்ணிக்கறேன்.. கல்லெல்லாம் கீழ போடுங்க ப்ளீஸ் :D:D:D

டிஸ்கி : ஹார்லி டேவிட்சன் படம்லாம் ஒரு பில்ட் அப்புக்கு தான்.. :D :D.. (ஓட்டி பாக்கனும்னு ஆசை இருக்கு.. ஆனா இளிச்சவாயன் எவனும் சிக்க மாட்றான். :D :D)

Labels: ,

posted by ACE !! at 4:01 AM 65 comments