புலம்பல்கள் - PULAMBALGAL

Tuesday, March 13, 2007

"Curry" Naan!!!

என்னன்னே தெரியல, இந்த யு.எஸ் ல எல்லாரும் நமக்கு சதி பண்ற மாதிரியே தோணுது.. ஒரே இம்சைங்க. முதல்ல கார் திருடன், ரெண்டாவது காப், மூணாவது டாக்ஸிகாரன், அப்புறம் டாக்டருங்க, இப்போ ரெஸ்டாரன்ட் வெய்ட்டர். இவனுங்களுக்கு நம்மள பாத்தாலே ஒரு மார்க்கமா தான் இருக்கும் போல. விஷயம் இது தான்..

நண்பன் ஒருத்தனோட (R~), சாப்பிடலாம்னு ஒரு வட இந்திய ரெஸ்டாரன்ட்க்குப் போனேன். Naan, சாதம் , சைட் டிஷ் ஆர்டர் பண்ணினோம். R~ Naan எடுத்து வாய்ல வச்ச உடனே தூ தூன்னு துப்ப ஆரம்பிச்சிட்டான்.... நான் பதறி போய் என்னடாச்சுன்னு பாத்தா, அவன் சாப்ட்ட Naanல ஒரு சின்ன கரித் துண்டு இருந்துச்சு. சரி, அடிக்கடி போற இடம்னால கண்டுக்காம கரித் துண்டு அடுப்புல இருந்து ஒட்டி இருக்கும்னு விட்டுட்டோம். R~, என்கிட்ட, "நீ Naan வேற வாங்கு நான் போய் வாய் கழுவிட்டு வரேன்"னு போயிட்டான். நான் அங்கிருந்த வெய்ட்டர கூப்டு, "இதுல சின்னதா ஒரு கரித் துண்டு இருக்கு வேற Naan கொடுங்க"ன்னு மாத்திட்டேன். R~ வந்து சந்தோஷமா நானை சாப்பிட ஆரம்பிச்சான், "கடக்"னு ஒரு சத்தம். R~ வேகமா திருப்பி துப்ப ஆரம்பிச்சிட்டான்.. என்னடான்னு பாத்தா முன்ன இருந்தத விட இன்னும் பெரிய கரித் துண்டு..

அட லூசுப்பசங்களா, நான் என்ன கரித்துண்டு சின்னதா இருக்குன்னா complaint பண்ணேன், பெருசா எடுத்துட்டு வரதுக்கு.. போடாங்கோ... தெரியாம பண்ணானா இல்ல நக்கலுக்கு பண்ணானா தெரியல.

இன்னொரு தடவை நானை மாத்த சொன்னா வெறும் கரியை எடுதுட்டு வந்துட போறான், எதுக்கு ரிஸ்க்னு R~ரை ரொம்ப கஷ்டப் பட்டு சமாதானப்படுத்தி இந்த கரி நானையே சாப்பிட வச்சேன். R~க்கு வேற நான் தான் ஏதோ சதி பண்ணிட்டதா பயங்கர சந்தேகம். என்ன சொன்னாலும் நம்பவே மாட்டேன்டான்..

எங்கேந்து தான் வருவானுங்களோ நம்மளையே தேடி.

Labels:

posted by ACE !! at 1:03 AM

6 Comments:

hmnn... inni varakum kari thundu ellam naan naanla paathadhey illa pa..

idhukku dhaan ..5 ruvaa biryani kadai maari oru idathula sappda koodanradhu:)-

March 13, 2007 at 11:23 PM  

kaaka 'curry'o ennavo:)-

March 13, 2007 at 11:29 PM  

//நான் என்ன கரித்துண்டு சின்னதா இருக்குன்னா complaint பண்ணேன், பெருசா எடுத்துட்டு வரதுக்கு//

LOL...ethukkum konjam jaakrathaiyaa irunga... :-)

March 14, 2007 at 1:22 AM  

@priya: ithukku antha waiter-e thevalaam.. :) kakka kariya... aiyooo.. neengaluma sathi pannanum..

@syam: mikka nanri.. konjam jaakirathayava.. romba jakakrathayaave irukka pakkaren..:)

March 14, 2007 at 8:20 AM  

Paavam nga unga friend R~ ....

Inimae paarthukkoonga...

March 16, 2007 at 11:32 AM  

@Raji

Inime R ennoda sapda varave maattan :)

March 17, 2007 at 6:18 AM  

Post a Comment

<< Home